சினிமாவில் கதாநாயகியாக வருவதற்கு முன்னாள் ஆயிரம் ரூபா சம்பளத்துக்காக, 3 மணி நேரம் நின்று பன்னீர் தெளித்த வேலையைச் செய்துள்ளாதாக நடிகை சமந்தா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் விரைவில் திருமணம் உள்ளது.இதைத் தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். ஏற்கெனவே ஒப்பந்தமான படங்களிலும் நடித்து முடித்துவிட்டார்.
இந்நிலையில், இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில்.நாம் கஷ்டப்பட்டு மேலே வருகிறோம். ஆனால் ஒரு உயர்ந்த இடத்துக்குப் போனாலும் நாம் பழையதை மறக்கவே கூடாது.நம்மை ஏற்றிவிட்ட ஏணிகளை நாம் அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டும்.
அனுபவங்கள்தான் நமக்கு கிடைக்கும் விலைமதிப்பில்லாத பாடங்கள். அவற்றை அடிக்கடி நினைத்துப் பார்ப்பது நல்லது. அவைதான் நமது எதிர்காலத்துக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்.நான் இப்போது சினிமாவில் பெரிய இடத்தில் இருக்கிறேன். அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் பட்டியலில் நானும் இருக்கிறேன் என்று பேசுகிறார்கள்.
இப்படிப்பட்ட நான் ஒரு காலத்தில் ஆயிரம் ரூபாய்க்காக மூன்று மணி நேரம் நின்றிருக்கிறேன்.14 வயதில் இருந்து எனது தேவைகளுக்காக நானே சம்பாதிக்க ஆரம்பித்தேன். வீட்டில் பணம் கேட்டதே இல்லை.
பொதுவாகத் திருமணங்கள் நடக்கும்போது மண்டப வாசலில் இரண்டு, மூன்று இளம்பெண்கள் நின்று திருமணத்துக்கு வருவோர் மீது பன்னீர் தெளிப்பதை பார்த்து இருப்பீர்கள். அந்த பன்னீர் தெளிக்கும் வேலையை நான் செய்து இருக்கிறேன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
மூன்று மணி நேரம் மண்டப வாசலில் நின்று பன்னீர் தெளித்த பிறகு எனக்கு சம்பளமாக ரூ.1.000 தருவார்கள். பணம் எவ்வளவு சம்பாதித்தோம் என்பது முக்கியம் இல்லை. அதை உழைத்து சம்பாதித்தோமா என்பதுதான் முக்கியம். எந்த வேலையையும் செய்யத் தயங்கக் கூடாது. செய்யும் தொழிலே தெய்வம் என்று கூறினார்.