கோடம்பாக்கத்தில் இப்பொது மூணு பேர் பத்திதான். எல்லாஎவளுக்கும் வாழ்க்கை கொடுக்க வேண்டாம்..ஐஸ்வர்யா தனுஷ் பத்ரகாளி ஆனார்.? பத்திரிகையாளர்கள் கூடினால் அமலாபால் ,தனுஷ் ,ஐஸ்வர்யாதனுஷ் பற்றி ஏதாவது ஒரு விஷயத்தை லீக் செய்கின்றனர். சூப்பர் ஸ்டார் கபாலிக்கு பின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
கூடவே மகள் ஐஸ்வர்யாவும் சென்று அப்பாவை பார்த்துக் கொண்டார். ஆனால் இந்த கேப்பில் தான் அமலாபால் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார் . இதன் பின்னணியில் தனுஷ் தான் காரணம் என்பது போல செய்திகள் பரவியது.தனுஷ் தரப்பில் வாயே திறக்கவில்லை.
நாடு திரும்பிய ஐஸ்வர்யா அப்பாவிடம் முறையிட அவர் தனுஷை அழைத்து கண்டித்தார் என்று கூறுகிறார்கள். வட சென்னை படத்தில் அமலாபால் தனுஷ் மிக நெருக்கமாக நடித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. மீண்டும் தனுஷ் அமலாவிடம் நெருக்கம் காட்டியதாகவும் இந்த விஷயமும் ஐஸ்வர்யாவிற்கு தெரிய வர உச்ச்சகட்ட கோபத்தில் கொந்தளித்து விட்டாராம்.
பத்ரகாளி போல் ஆடி தீர்த்து விட்டார் என்கிறார்கள். எவளுக்கும் நீங்க வாழ்க்கை கொடுக்க வேண்டாம். உங்க வேலைய மட்டும் பாருங்க என்று வறுத்தெடுத்து விட்டாராம்.