விஜய்-அமலாபால் இருவரும் காதல் திருமணம் செய்து, பல்வேறு கருத்து வேறுபாடு காரணமாக தற்போது விவாகரத்து செய்ய உள்ளனர்.
இவர் சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கியதால் தான் விவாகரத்து என கூறப்பட்டது. இந்நிலையில் அமலாபால் மாமனாரான தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பன் நட்பை இழக்க விரும்பாத சில இயக்குனர்கள் தங்கள் படங்களில் அமலாபாலை நடிக்கவைக்கபோவதில்லை என முடிவு செய்துள்ளனர்.
தற்போது அமலாபாலுக்கு தன் வசம் இருந்த இரண்டு படமும் பறி போக, வட சென்னை படத்திலும் இன்னும் அவருக்கு உறுதியான அழைப்பு வரவில்லையாம்.
இதனால் அப்செட் ஆகியுள்ள அமலாபால் தெலுங்கு, மலையாளம் பக்கம் தூது அனுப்பி வருகிறாராம். ஆனால் இது குறித்து அமலாபால் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை, மேலும் விஜய்யை பிரிந்ததால் தான் அவர் மார்க்கெட் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.